மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பரிசோதனை நிழ்வு திங்கட்கிழமை(14) இடம்பெற்றது. இதன்போது பொலிசாருக்கு விளக்கங்கள் வழங்கப்பட்டு, பொலிசார் பயன்படுத்தும், வாகனங்கள், புத்தகங்கள், உள்ளிட்ட பல ஆவணங்கள் இதன்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்க அவர்கள் இதன்போது கலந்து கொண்டுபரிசோதனைகளை முன்னெடுத்திருந்தார்.
மேலும் களுவாஞ்சிகுடி பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜனக ஜெயரத்ன, களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் அபேவிக்ரம, ஆகியோரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment