க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு.
இந்நிகழ்விற்கு மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலை அதிபர்களான மட்/ககு/வந்தாறுமுலை மத்திய மகா வித்தியாலய அதிபர் ரி.முரளிதரன், மட்/ககு/வந்தாறுமுலை விஸ்ணு மகா வித்தியாலய அதிபர் எஸ்.மோகன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
கனடாவில் இருக்கும் இளையதம்பி ஏகாம்பரம் அவர்கள் தனது குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்கள் மூலம் இங்குள்ள வறிய நிலையில் உள்ள மாணவர்களை பொறுப்பெடுக்கும் திட்டம் ஊடாக புலம்பெயர்ந்துள்ள நல் உள்ளங்களால் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் மாதாந்தம் 2800 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.
அந்த உதவித் தொகையினைப் பெற்று க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்த 10 மாணவர்களுக்கு முதற்கட்டமாக தலா 10,000 ரூபாய் தொடக்கம் 25,000 ரூபாய் வரையிலான ஊக்குவிப்புத் தொகை வழங்கப்பட்டது.
0 Comments:
Post a Comment