23 Oct 2021

மட்டு.மாவட்டத்தில் முதல் தடவையாக உயர்வகுப்பு மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்.

SHARE

மட்டு.மாவட்டத்தில் முதல் தடவையாக உயர்வகுப்பு மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்.

உயர்வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைககள் வியாழக்கிழமை (21)  முதன் முறையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பாகியுள்ளன. பைஸர் தடுப்பூசிகளே இவ்வாறு ஏற்றப்படுவதாக கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்தார்.          

மட்டககளப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் வியாழக்கிழமை  காலை தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம் பெற்றன. மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் இ.உதயகுமார் முன்னிலையில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.










SHARE

Author: verified_user

0 Comments: