மட்டக்களப்பு துறைநீலாவணையில் 40 இலட்சம் ரூபா செலவில் கூடைப்பந்தாட்ட மைதானம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு.
அமரர் ஓய்வு பெற்ற அதிபர் சரவணமுத்து அவர்களின் ஞாபகார்த்த
கூடைப்பந்தாட்ட மைதானம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு மத்திய
விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை(30)
துறைநீலாவணை பொது விளையாட்டுமைதானத்தில் சரவணமுத்துவின் புதல்வர் கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரான நவநீதன் தலைமையில் இடம்பெற்றது.
40 இலட்சம் செலவில் அமைக்கப்படவுள்ள விளையாட்டு திடல் விளையாட்டு அரங்குக்கான அடிக்கல்லினை ஓய்வு பெற்ற அதிபர் சரவணமுத்துவின் பாரியார் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசாங்க அதிபர் கே.கருணாகரன் , மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் வி. சிவப்பிரியா, மேலதிக மாகாணக்கல்விப் பணிப்பாளர் எந்திரி என்.சிவலிங்கம், கிழக்குமாகாண உதவிப் பிரதமசெயலாளர் ஜீ.பிரணவன், லகுகல பிரதேசசெயலாளர் ந.நவநீதராசா, கல்முனை வடக்கு பிரதேசசெயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் உட்பட பலர் கலந்துகொண்டு அடிக்கல்லினை நட்டு வைத்தார்.
0 Comments:
Post a Comment