8 Sept 2021

கொரோன சிகிச்சை நிலையம் அமைக்க தமது திருச்சபைக்கு சொந்தமான உடைமைகளை பயன்படுத்துமாறு அருட்தந்தை சகாயநாதன் தெரிவிப்பு.

SHARE

கொரோன சிகிச்சை நிலையம் அமைக்க தமது திருச்சபைக்கு சொந்தமான உடைமைகளை பயன்படுத்துமாறு அருட்தந்தை சகாயநாதன் தெரிவிப்பு.

மனிதன் மரித்தாலும் மனிதநேயம் மரித்து போய்விடக்கூடாது என்பதற்கமைய இயேசுசபையின் அருட்தந்தை சகாயநாதன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்கு  கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். அதில் தற்போழுது நாட்டில் அதிகரித்துவரும் கொரோன நோய்த்தாக்கத்தினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கான சிகிச்சை நிலையங்களை அமைப்பதற்காக கல்குடாவில் காணப்படும் தமது தியானபீடம், ஒன்றுகூடல் மண்டபம் மற்றும் மூலிகை வைத்திய நிலையம் போன்றவற்றை பயன்படுத்துமாறு கோரியிருந்தார்.

அதனடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை(05) அவ்விடத்திற்க்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அங்குள்ள நிலைமைகளையும் வசதிகளையும் அவதானித்திருந்தார்.

மேலதிக வசதிகள் தேவைப்படின் தற்காலிக கட்டிடங்களையும், கூடாரங்களையும் அமைத்து தருவதற்கு தாம் தயாராகவுள்ளதாகவும், தேவைப்படின் மட்டக்களப்பில் அமைந்துள்ள தமது மன்ரேசா நிலையத்தினையும் பயன்படுத்துமாறு, இதன்போது அருட்தந்தை அவர்கள் இதன்போது மேலும் தெரிவித்தார்.

தற்போதுள்ள சூழ்நிலையில் தாதியர்கள் மற்றும் சிற்றூழியர்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக கொரோனா சிகிச்சை நிலையங்கள் வைத்தியசாலைகளுடன் இணைந்ததாகவே இயங்கிவருகின்ற காரணத்தினால் எதிர்காலத்தில் நோயாளர்கள் அதிகரிக்கின்ற பட்சத்தில் இயேசுசபைக்கு சொந்தமான அந்த இடங்களை பயன்படுத்துவதற்கான முடிவுகளும் அவ்விடத்தில் அருட்தந்தையவர்களுடன் எட்டப்பட்டிருந்தது.                                     என கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி ஸ்டீவ் சஞ்சீவ் தெரிவித்தார். 








SHARE

Author: verified_user

0 Comments: