16 Sept 2021

மட்டக்களப்பில் பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான பால்மா பக்கட்டுகள் நுகர்வோர் அதிகாரசபையால் மீட்பு.

SHARE

மட்டக்களப்பில் பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான பால்மா பக்கட்டுகள் நுகர்வோர் அதிகாரசபையால் மீட்பு.

மட்டக்களப்பு காத்தான்குடியில் பல சரக்கு கடைகளில் பதுக்கி வைத்திருந்த பால்மா பக்கட்டுக்கள் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளினால் செவ்வாய்கிழமை (14) மீட்கப்பட்டன.

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் கிழக்குமாகாண உதவிப் பணிப்பாளர ஆர்.எப். அன்வர் சதாத் தலைமையிலான அதிகாரிகள் மேற் கொண்ட திடீர் சோதனை நடவடடிக்கையின் போது பதுக்கி வைத்திருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான பால்மா பக்கட்டுக்கள் மீட்கப்பட்டு அவைகள் அவ்விடத்திலேயே உடனடியாகவே மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டன.

காத்தான்குடி பெரிய சந்தைக் கட்டிடத்திலுள்ள பல சரக்கு கடையொன்றிலும், புதிய காத்தான்குடி பாம் வீதியிலுள்ள பல சரக்கு ஒன்றிலுமாக இரண்டு பல சரக்கு கடடையில்  மேற்கொள்ளப்பட்ட இந்த திடீர் சோதனை நடவடிக்கையின் போதே இந்த பால்மா பக்கட்டுக்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டு அவைகள் மீட்கப்பட்டு அவ்விடத்திலேயே உடனடியாகவே மக்களுக்கு விற்பணை செய்யப்பட்டன.

பொது மக்களிடத்திலிருந்து தமக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து குறித்த வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பு சோதனை நடவடிக்கையின் போதே இப்பால்மா பக்கட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் கிழக்குமாகாண உதவிப் பணிப்பாளர ஆர்.எப். அன்வர் சதாத் தெரிவித்தார்.







                                                                                       

SHARE

Author: verified_user

0 Comments: