16 Sept 2021

கொவிட் - 19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளுக்கு இரண்டாம் கட்டமாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக்கிளைத் தொண்டர்கள் அனுப்பி வைப்பு.

SHARE

கொவிட் - 19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளுக்கு இரண்டாம் கட்டமாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக்கிளைத் தொண்டர்கள் அனுப்பி வைப்பு.

கொவிட் - 19 செயற்பாடுகளுக்கு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் தம்மாலான உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கி வருகின்றது. இந்நிலையில் கொவிட் - 19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளுக்கு இலங்கை முழுவதும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் தொண்டர்களை வழங்கியும் உதவி வருகின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனைகளால் முன்னெடுக்கப்படும். கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் தொண்டர்கள் இரண்டாம் கட்டமாகவும் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இவ்வாறு தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளுக்கு உதவும் தொண்டர்களுக்குரிய விளக்கங்களும், அது தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு செவ்வாய்கிழமை(14) இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையில் நடைபெற்றது.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் தம்பிப்போடி வசந்தராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்; பொருளாளர் வடிவேல் சக்திவேல், கிளைநிறைவேற்று உத்தியோகஸ்த்தர் திருமதி வேணுஷா பிரசாந் கிளைஉத்தியோகஸ்த்தர் கண்டுமணி ரூபன், மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட தொண்டர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தொண்டர்களுக்கு கொவிட் - 19 தொடர்பிலும், அதன் தடுப்பூசி தொடர்பிலும், தடுப்பூசி வழங்கும் இடங்களில் சுகாதாரத்துறை உத்தியோகஸ்த்தர்களுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பிலும் தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட்டதோடு, அவர்களுக்குத் தேவையான  முகக்கவசங்கள், கையுறை, தொற்று நீங்கி என்பனவும் வழங்கப்பட்டன. இத்தொண்டர்கள் வியாழக்கிழமை(16) முதல் மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும், தலா இரண்டு தொண்டர்கள் வீதம் பணியாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு கொவிட் - 19 தடுப்பூச் வழங்கும் வழங்கப்பட்டுவரும் செயற்பாடுக்ளுக்கு கடந்த மாதம் முதற்கட்டமாக 25 தொண்டர்கள் மாவட்டம் முழுவதுவும் சுகாதாரத் திணைக்களத்தினருடன் இணைந்து செயற்பட்டிருந்தனர் அவர்களின் சேவைகள் முடிவுற்றிருந்த இந்நிலையில் மீண்டும் வியாழக்கிழமை(16) முதல் இரண்டாம் கட்டமாக சேவை வழங்கவுள்ளனர். இலங்கையில் அவ்வப்போது ஏற்பட்டு வரும் இடர்களுக்காக அரசாங்கம் மக்களுக்கு உதவி வருவதற்கு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் தம்மாலான உதவிகளை இலங்கை முழுவதும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.










SHARE

Author: verified_user

0 Comments: