9 Aug 2021

வீதி விபத்தில் சிக்கிய பிரதேச செயலக உத்தியோகத்தர் சிகிச்சை பயனின்றிப் பலி.

SHARE

வீதி விபத்தில் சிக்கிய பிரதேச செயலக உத்தியோகத்தர் சிகிச்சை பயனின்றிப் பலி.

வீதி விபத்தொன்றில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த மட்டக்களப்புவாகரை பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவர் சிகிச்சை பயனின்றிப் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு ஆரையம்பதியை வசிப்பிடமாகக் கொண்ட ஜெகநாதன் காண்டீபன் (வயது 44) என்பவரே ஞாயிறு இரவு பலியாகியுள்ளார்.

வாகரைப் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் இவர் கடந்த 02.08.2021 அன்று கடமைக்காக மட்டக்களப்பிலிருந்து மோட்டார் சைக்கிளில் வாகரை பிரதேச செயலகத்திற்குச் சென்று கடமை முடிந்து அன்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மட்டக்களப்புதிருகோணமலை வீதியில் புல்லாவி எனுமிடத்தில்  வாகனமொன்றினால் மோதப்பட்டு விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

உடனடியாக உதவிக்கு விரைந்தவர்களால் அவர் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இவ்வாறான நிலையில் சிகிச்சை பயனின்றி ஞாயிறன்று 08.08.2021 இரவு மரணமடைந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக விபத்தை ஏற்படுத்திய வாகனமும் ஏற்கெனவே கைப்பற்றப்பட்டு சாதியும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வாகரைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.          



SHARE

Author: verified_user

0 Comments: