1 Aug 2021

புணரமைப்புச் செய்யப்பட்ட சொறுவாமுனை – விளாவெட்டுவான் வீதி சந்திரகாந்த எம்.பி திறந்து வைப்பு.

SHARE

புணரமைப்புச் செய்யப்பட்ட சொறுவாமுனைவிளாவெட்டுவான் வீதி சந்திரகாந்த எம்.பி திறந்து வைப்பு.

49 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மாவட்டம் சொறுவாமுனை வீதி புணரமைக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் வெள்ளிக்கிழமை(30) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வவுணதீவுப் பிரதேசத்தின் 2000 மீற்றர் நீளம் கொண்ட சொறுவாமுனைவிளாவெட்டுவான் பிரதான வீதியே புணரமைப்புச் செய்யப்பட்டு உத்தியோக பூர்வமாக மக்கள் பாவனைக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் சிவகுமார், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் பரதன், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், சட்டத்தரணி திருமதி..மங்களேஸ்வரி, பொதுமக்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இணக்கப்பாட்டு அரசியலால் தற்போது கிழக்கு மாகாணத்தில் அனைவருக்கும் மின்சாரம், குடிநீர், போக்குவரத்து, சிறந்த கல்வி, பேன்ற எமது சிறந்த திட்டங்கள் மக்களைத் தேடி வந்துள்ளன. என இதன்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கருத்துத் தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: