4 Aug 2021

அகிலன் திருகோணமலை றோட்டரிக் கழகத்தின் 43 ஆவது தலைவ ராகபதவியேற்பு.

SHARE

அகிலன் திருகோணமலை றோட்டரிக் கழகத்தின் 43 ஆவது  தலைவ ராகபதவியேற்பு.

திருகோணமலை ரோட்டரி கழகத்தின் 43 ஆவது தலைவராக .அகிலன் பதவி ஏற்க்கும் நிகழ்வு  டைக்  வீதியில் உள்ள  றோட்டரி அலுவலகத்தில் ஞாயிற்று கிழமை (01) இடம் பெற்றது.

இந் நிகழ்வில் திருகோணமலை ரொட்டறி கழக தலைவர் சுரேஷ் சுப்ரமணியம், கழகம் சார்பில் வரவேற்பு உரை நிகழ்தினார். அவரது காலத்தில், திருகோணமலை ரோட்டரி கிளப் சிறப்பாக செயல் பட்டதாகவும் அதற்கு உதவிய தனது குழு உறுப்பினர்களுக்கு நன்றி கூறி கௌரவித்தார்.

செயலாளர் அருள் வரதராஜா 2020 - 2021  ஆண்டில்  திருகோணமலை ரோட்டரி   கழக  நடவடிக்கைகள் பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை இதன்போது வழங்கினார்.

இதில் திருகோணமலை லிங்கநகர் ஸ்ரீ கோணலிங்கம் மகா வித்யாலயத்துக்கு ஒரு இரட்டை மலசல கூடம் கையளிக்கப் பட்டது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பேராசிரியர் .கனகசிங்கம் பல்கலைக்கழக வளாக தலைவர் கலந்து கொண்டார். இதன்போது கடந்த ஆண்டின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் புதிதாக தெரிவான தலைவர் .அகிலனுக்கு தலமைப்பதவியை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்..

பிரதம விருந்தினர் பேராசிரியர் .கனகசிங்கம் அவரது உரையில் றோட்டரிக் கழகம் இன்னலுற்ற மக்கள் மத்தியில் சிறந்த சேவை புரிவதாக பாராட்டினார். மற்றும்   திருகோணமலை மாவடட கல்வி நிலைமை வீழ்ச்சியுற்றுப்பதை புள்ளி விபரங்களுடன் எடுத்துக் கூறி, அதை  நல்ல முறையில் சீர் படுத்துவதட்கு மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அத்துடன் திருமலை வளாகத்தை எதிர்காலத்தில் தனிப் பல்கலைக்கழகமாக தரமுயற்றுவதற்கு அனைவரும் இணைந்து செயல்பட முன்வரவேண்டும் என்று எடுத்துரைத்தார்.    










               

SHARE

Author: verified_user

0 Comments: