சிறைத்தண்டனை பெற்ற பிரபலபோதைப் பொருள் வியாபாரி 2 கிலோ கேரளா கஞ்சாவுடன் காத்தான்குடியில் கைது.
மிக நீண்டகால போதைப்பொருள் வியாபாரியும், போதைப்பொருள் விற்பனைக்குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்தவருமான காத்தான்குடியைச் சேர்ந்த 57 வயதுடைய பிரபல போதைப்பொருள் வியாபாரியும், 46 வயதுடைய ஒருவரும் வியாழக்கிழமை ( 12) இரவு 11 00 மணிண்ணளவில் மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.
ஹொஸ்டல் வீதி, 3ம் குறுக்குத்தெரு, காத்தான்குடி எனும் முகவரியிலுள்ள வீட்டில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 2 கிலோ 50 கிராம் கேரள கஞ்சாவும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பிஎஸ்.பி.பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் வழிகாட்டலில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மட்டக்களப்பு மாவட்ட தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
0 Comments:
Post a Comment