9 Jul 2021

பஸில் ராஜபக்ஸ பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்து களுவாஞ்சிகுடியில் பட்டாசி கொளுத்தி வாழ்த்து தெரிவிப்பு.

SHARE

பஸில் ராஜபக்ஸ பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்து களுவாஞ்சிகுடியில் பட்டாசி கொளுத்தி வாழ்த்து தெரிவிப்பு.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஸ அவர்கள் வியாழக்கிழமை(08) நாடாளுமன்ற உறுப்பினராகவும், நிதி அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துள்ளதையடுத்து மக்கள் பல பகுதிகளிலும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி நகரில் ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமாரின் ஏற்பாட்டில் கட்சியின் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச அவர்களின் கட்டவுட், மற்றும் பதாகைகள் வைக்கப்பட்டு பொதுஜனப் பெரமுன கட்சியின கொடிகள் தொங்க விடப்பட்டு, ஆதரவாளர்கள் களுவாஞ்சிகுடி நகரிலும், களுவாஞ்சிகுடியில் அமைந்துள் ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் காரியாலயத்திற்கு முன்பும் பட்டாசி கொழுத்தி வாழ்த்துத் தெரிவித்தனர்.











SHARE

Author: verified_user

0 Comments: