காத்தான்குடியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மூன்று கிராம சேவகர் பிரிவுகள் புதன்கிழமை காலை 6மணியுடள் விடுவிப்பு.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில தனிமைப்படுத்தப்படடிருந்த மூன்று கிராம
சேவகர் பிரிவுகள் புதன்கிழமை(14) புதன்கிழமை காலை 6மணியுடள் விடுவிக்கப்பட்டன.
புதிய காத்தான்குடி வடக்கு 167ஏ, புதிய காத்தான்குடி தெற்கு 167சி, புதிய காத்தான்குடி
கிழக்கு 167பி ஆகிய கிராசேவகர் பிரிவகளே விடுவிக்கப்பட்டுள்ளன.
காத்தான்குடியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடந்த மாதம் 23ம் திகதி
எட்டு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன.
இதில் ஐந்து கிராமசேவகர் பிரிவுகள் கடந்த 8ம்திகதி விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment