21 Jun 2021

பயணத் தடை நீங்கியதையடுத்து மட்டு.மாவட்டத்தில் மக்கள் பொருள் கொள்வனவில்-பொலிஸ் இராணுவம் பாதுகாப்பு கடமையில்.

SHARE

பயணத் தடை நீங்கியதையடுத்து மட்டு.மாவட்டத்தில் மக்கள் பொருள் கொள்வனவில்-பொலிஸ் இராணுவம் பாதுகாப்பு கடமையில்.

கடந்த ஒருமாதகாலமாய்  அமுலிலிருந்த பயணத்தடை திங்கட்கிழமை (21) காலை  நீக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் அத்தியாவசியப் பொருட் கொள்வனவில் ஈடுபட்டனர்.

களுவாஞ்சிகுடி, ஆரையம்பதி, மட்டக்களப்பு காத்தான்குடி உட்பட பல முக்கிய நகரங்களில் அத்தியாசிய வர்த்தக நிலையங்கள் மாத்திரம்  திறக்கப்பட்டிருந்தன. வாகனப் போக்குவரத்தும் பெரிதாக இடம் பெறவில்லை. ந கரங்களுக்கு மக்கள் வருவதும் குறைவடைந்திருந்தது.

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கால்நடையாக பலர் பொருட் கொள்வனவில் ஈடுபட்டதையும் அவதானிக்க முடிந்தது.

நகரங்களில் படையினரும் பொலிசாரும் அதிகளவில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சோதனை நடவடிக்கைகளும் இடம்  பெற்றன.

எனினும் வங்கிகள் மற்றும் மதுபான சாலைகளில் மக்கள் அதிகம் மிக நீண்ட வரிசையில் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.








SHARE

Author: verified_user

0 Comments: