மட்டு.மாவட்ட மக்களால் முழுமையாக கடைப்பிடிக்கப்படும் பயணக்கட்டுப்பாடு அன்றாட அலுவல்கள் முழுமையாக ஸ்தம்பிதம்.
அரசாங்கத்தினால் வியாழக்கிழமை(13) இரவு 11மணிமுதல் அமுல் படுத்தப்படும் பயணக் கட்டுப்பாட்டு நடைமுறை மட்டக்களப்பு மாவட்ட மக்களால் முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
இம்மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் யாவும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. போக்குவரத்துச் சேவைகளும் இடம் பெறவில்லை..
பயணக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்ததைத் தொடர்ந்து பிரதான நகரங்களில் இராணுவத்தினரும் பொலிசாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகச் செயல் இழந்துள்ளதுடன் வீதிகளும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
இந்நிலையில் களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுகளிலும் பலத்த பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.
குறித்த பகுதிகளிலும் பொதுச்சந்தை மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலைக்கு செல்வோர் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு செல்வோர் மாத்திரம் தமது அடையாளங்களை உறுதிப்படுத்தி வீதிகளில் நடமாட்டத்தில ஈடுபடுவதனை அவதானிக்க முடிகிறது.
பொலிசார் மற்றும் இராணுவத்தினர் விசேட சோதனைச்சாவடிகளில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment