7 Apr 2021

சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு

SHARE

(சர்ஜின்) 

சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 

" அன்பான வணிகன் -2021" நிகழ்ச்சி திட்டத்தின் மூலம் இலங்கையில் உள்ள அனைத்து சமூர்த்தி வங்கி பிரிவுகளில் மாபெரும் விற்பனை சந்தை நாடு பூராகவும் 06 தொடக்கம் 12 திகதி வரை நடைபெறுகிறது.


அந்த வகையில் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலக பிரிவில் மாவடிமுன்மாரி சமூர்த்தி வங்கியின் குறித்த விற்பனை சந்தை 
2021. சித்திரை புதன் கிழமை (07) வங்கி முகாமையாளர் க. சந்திரகுமார் தலைமையில் வங்கிக்கு அருகாமையில் உள்ள நிர்பாசன திணைக்கள வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர் , உதவி பிரதேச செயலாளர் மற்றும் கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் , தலைமையக முகாமையாளர் , ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் பல வியாபார நிலையங்கள் குறித்த வளாகத்தில் விற்பனையில் ஈடுபட்டனர். இதன் மூலம் பல நூற்றுக்கணக்கான மக்கள் பயனடைந்தனர்.











SHARE

Author: verified_user

0 Comments: