புத்தாண்டையொட்டி மட்டக்களப்பில் சுகாதார நடைமுறைகளை மீறிய வர்த்தக நிலையங்கள் சுகாதார அதிகாரிகளால் சுற்றிவளைப்பு.
சிங்கள தமிழ் புத்தாண்டையொட்டி மட்டக்களப்பு காத்தான்குடி நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள்
சுகாதார அதிகளால் சனிக்கிழமை (11) மாலை சுற்றிவளைக்கப்பட்டன.
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ எல் எம் நபீல் தலைமையில் மேற்பார்வை
பொதுச் சுகாதார பரிசோதகர்
ஏ.எல்.எம்.பஷீர் உட்பட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்
இதன் போது காத்தான்குடி பிரதான வீதி உட்பட கடற்கரை வீதி ரெலிகொம் வீதி போன்ற வீதிகளில்
உள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்று சுகாதார நடைமுறைகள் தொடர்பாக அவதானித்ததுடன் முக
கவசம் அணிதல் சமூக இடைவெளியைப் பேனுதல் தொடர்பில் விழிப்புணர்வை
ஏற்படுத்தியதுடன் அறிவுரைகளையும்் வழங்கினர்.
அதேபோன்று உணவகங்கள் சிற்றுண்டிச் சாலைகள் ஹோட்டல்கள் பல சரக்கு விற்பனை நிலையங்கள்
போன்ற வர்த்தக நிலையங்களுக்கு சென்ற சுகாதார அதிகாரிகள் அங்கு உணவுப்பொருட்களையும்
பரிசோதனை செய்தனர்
பொதுமக்கள் சமூகக் இடைவெளியைப் பேணி சுகாதார நடைமுறைகளுடன் நடந்து கொள்ளுமாறும் இதன்போது
இவர்கள் வலியுறுத்தினர்.
0 Comments:
Post a Comment