8 Mar 2021

முகாமையாளரை மாற்றககோரி மட்டு.இ.போ.ச.டிப்போ ஊழியர்கள் ஆர்பாட்டம்-க.பொ.த.பரீட்சைக்கு இடையூறின்றி பஸ் சேவைகள் வழமை நிலையில்.

SHARE

முகாமையாளரை மாற்றககோரி மட்டு.இ.போ.ச.டிப்போ ஊழியர்கள் ஆர்பாட்டம்-க.பொ.த.பரீட்சைக்கு இடையூறின்றி பஸ் சேவைகள் வழமை நிலையில்.

சாலை முகாமையாளரை இடமாற்றக்கோரி இலங்கை போக்குவரத்துச் சாலையின் மட்டக்களப்பு டிப்போ ஊழியர்கள் திங்கட்கிழமை(08) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் இடம் பெற்ற போதிலும் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் நலன்கருதி பஸ் சேவைகள் வழமை போன்று இடம்பெற அனுமதித்துள்ளதாக ஆர்ப்பாட்டக் காரர்கள் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை காலை டிப்போவின் பிரதான நுழைவாயிலை மூடிய ஊழியர்கள் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து சாலை முகாமையாளர் எஸ்.கிருஸ்ணராஜிடம் கேட்டபோது சாலையில் மொத்தம் 198 ஊழியர்கள் கடமை புரிகின்றனர்.அவர்களுள் சொற்பமானவர்களே இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஒழுக்காற்று விசாரணைக்கு உட்பட்ட ஊழியர்கள் எனத் தெரிவித்தார்.

ஸ்தலத்திற்கு விரைந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஹெட்டியாராச்சி தலைமையிலான பொலிசார் ஆர்பாட்டக்காரார்களுடன் பேச்சு நடாத்தினர்.







SHARE

Author: verified_user

0 Comments: