8 Mar 2021

சௌபாக்கியா வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் திறந்து வைக்கப்பட்டன.

SHARE

சௌபாக்கியா வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள்  திறந்து வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு காத்தானகுடி பிரதேச செயலாளர் பிரிவில் ஜனாதபதியின் சுபீட்சத்தின் நோக்கு   சமுர்த்தி சௌபாக்கியா வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் சனிக்கிழமை (06) மாலை  திறந்து வைக்கப்பட்டன.

இதில் காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதர், உதவி பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ்.சில்மியா, காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி பத்மா ஜெயராஜ், வலய முகாமையாளர் ஏ.எல்.இசட் பஹ்மி சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம.அன்சார் சமுர்த்தி வலய உதவியாளர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அன்வர் உட்பட பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது 4 வீடுகள் திறந்து வைக்கப்பட்டதுடன் பயணாளிகளிடம் வீட்டின் திறப்புக்கள் கையளிக்கப்பட்டன. சௌபாக்கியா வீடமைப்பு திட்டத்தின் கீழ் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் வழங்கிய இரண்டு இலட்சம் ரூபா நிதியுதவியுடன் பயணாளிகளின் பங்களிப்பு மற்றும் ஏனையோரின் பங்களிப்பு உதவியுடன் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.







SHARE

Author: verified_user

0 Comments: