சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தில் ஒரு இலட்கம் காணிகள் வழங்கும் நேர்முகத்தேர்வு.
சுபீட்சத்தின் நோக்கு நாட்டை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக தொழில் முயற்சியில் ஈடுபடும் இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு அமைய ஒரு இலட்சம் அரச காணிகளை முதலீட்டு வாய்ப்புகளுக்காக வழங்கும் திட்டத்தின் கீழ் தொழில் முயற்சி ஆற்றல் உடையவர்களினால் விண்ணப்பட்ட விண்ணப்பங்களுக்கான நேர்முகப் தேர்வுகள் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் இளம் தொழில் முயற்சியாளர்களுக்கான ஒரு இலட்சம் அரச காணிகள்வழங்கும் திட்டத்திற்கான நேர்முக தேர்வு புதன்கிழமை (17)மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் இருந்து விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான முதல் கட்ட நேர்முக தேர்வு மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் ஏ.அருணன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
0 Comments:
Post a Comment