பிரதேச மக்களின் நன்மை கருதி காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை அதன் வழமையான சிகிச்சைகளை நடத்திச் செல்ல ஏற்பாடுகளைச் செய்து தருமாறு காத்தான்குடி தள வைத்தியசாலை அபிவிருத்திக் குழுத் தலைவரும் அவ்வைத்தியசாலையின் அத்தியட்சகருமான வைத்தியர் எம்.எஸ்.எம். ஜாபிர் மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நஸீர் அஹமட்டின் கவனத்திற்கு கடந்த வியாழக்கிழமை கொண்டு வந்திருந்தார்.
அந்த வேண்டுகோளை நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றதன் அடிப்படையில் சுகாதார அமைச்சின் தொழினுட்பக் குழுவினர் சனிக்கிழமை 13.03.2021 காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இவ்வைத்தியசாலையை மீண்டும் இயங்க வைக்கும் முகமாக அதற்கான சாத்தியவள அறிக்கைய அடுத்து வரும் ஒரு வார காத்திற்குள் சம்ர்ப்பித்ததும் உடனடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
0 Comments:
Post a Comment