15 Mar 2021

மட்டு.வில் பொலிசாருக்கு கொரோனா - 18 பொலிசாருக்கு அன்டிஜன் பரிசோதனை.

SHARE

மட்டு.வில் பொலிசாருக்கு கொரோனா  - 18 பொலிசாருக்கு அன்டிஜன் பரிசோதனை.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக   பகுதியில் ஞாயிறுக்கிழமை(14) முன்னெடுக்கப்பட்டரபிட்  அன்டிஜன்  மூலம்   பரிசோதனையில்  எவருக்கும்  கொரோனா வைரஸ் தொற்று  இல்லை என  மட்டக்களப்பு  பொதுசுகாதார வைத்திய அதிகாரி  அலுவலக  வைத்தியர்   தெரிவித்துள்ளார்

மட்டக்களப்பு   பொலிஸ்  நிலைய பொலிஸ்   உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனாவைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் பொலிஸ்  உத்தியோகத்தருடன் நேரடியாக தொடர்பு பட்டிருந்த 18 பொலிஸ்  உத்தியோகத்தர்களுக்கான  ரபிட் அன்டிஜன் டெஸ்ட் மூலமான பரிசோதனைகளும், வெளிமாவட்டங்களில் இருந்து  வருகை தந்தவர்களில்   தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த   11 நபர்களுக்கான  பி.சி.ஆர் பரிசோதனைகளும் மட்டக்களப்பு   சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(14)  முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு   சுகாதார வைத்திய அதிகாரி  அலுவலக  வைத்தியர்  கிரிசுதன்    வழிகாட்டலின் கீழ்   மட்டக்களப்பு   சுகாதார வைத்திய அதிகாரி  அலுவலக   சுகாதார  பரிசோதகர்களினால் ரபிட்  அன்டிஜன் டெஸ்ட் மூலம்  18 பொலிஸ்  உத்தியோகத்தர்களுக்கு  மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்  கிடைக்கப்பெற்ற அறிக்கைக்கு அமைய எந்தவொரு   பொலிஸ்  உத்தியோகத்திருக்கும்   கொரோனா வைரஸ் தொற்று  இல்லை என  மட்டக்களப்பு   சுகாதார வைத்திய அதிகாரி  அலுவலக  வைத்தியர்   தெரிவித்துள்ளார்.

இதேவேளை 11 நபர்களுக்கு  மேற்கொள்ளப்பட்ட  பி சிஆர் பரிசோதனைகளுக்கான அறிக்கைகள் கிடைக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.








SHARE

Author: verified_user

0 Comments: