சீரற்ற காலநிலையால் மட்டு.மாவட்டத்தில் பாரிய கடல் கொந்தழிப்புமீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கடுமையான கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதுடன் கடுமையான காற்றும் வீசிவருகின்றது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் மீன்பிடி நடவடிக்கைகள் முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக புதிய நாவலடி, காத்தான்குடி, சவுக்கடி, வாகரை உட்பட பல மீன்பிடி பிரதேசங்;களில் இக்கடல் கொந்தளிப்பு காணப்படுகின்றது..
கடல் காந்தளிப்பு காரணமாக மீனவர்கள் மீன்பிடி நடிவடிக்கைகளிலருந்து விலகியிருக்குமாறு மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்தும் கடல் கொந்தளிப்பாக காணப்படுமென மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ரமேஸ் தெரிவித்தார்.
இதனால் மீனவர்கள் தங்களது படகுகளையும் மீன்பிடி கலன்களையும் கரையிலிருந்து நீண்ட தூரத்தில் நிறுத்தியுள்ளனர்.
இம் மாவட்டத்தில் சுமார் 24 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment