3 Feb 2021

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தில் அணி திரளும் மக்கள்

SHARE

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தில் அணி திரளும் மக்கள்

எத்தனை துன்பங்கள், துயரங்கள் வந்தாலும் தமிழன் அடிமையாகமாட்டான், அவன் தனது உணர்ச்சிகளோடுதான் வாழ்ந்து கொண்டிருப்பான் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறீநேசன் தெரிவித்துள்ளார்.

 தமிழினத்திற்கு நீதிகோரிய, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான ஆர்ப்பாட்டம் இன்று காலை ஆரம்பமாகி, பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்கள் ஆகியோரின் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது.

சிவில் அமைப்பினரின் ஏற்பாட்டில் இந்த தொடர் போராட்டம் இடம்பெற்று வருவதுடன், இந்த தொடர் போராட்டத்திற்கு சகல தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் தமது முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளனர்.

 இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு தனது கருத்தினை பதிவிடும்போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 தொடர்ந்தும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேராட்டம் பல தடைகளை தாண்டி தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

 கொட்டும் மழையிலும், பெரும்திரளான மக்கள் உணர்வோடும், உரிமை தாகத்தோடும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

 உண்மையில் நாங்கள் போராடமல் எதையும் பெற முடியாது, போராடித்தான் அனைத்தையும் பெற முடியும்.

 ஆகவே, அடக்குமுறை, ஒடுக்குமுறை, சண்டித்தனம், அராஜகம் போன்ற அவர்களது நுட்பமான திட்டங்களை நாங்கள் தகர்த்தெறிவதாக இருந்தால் ஜனநாயக வழியில், சாத்வீக வழியில் போராடித்தான் ஆக வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.














SHARE

Author: verified_user

0 Comments: