மட்டு - கல்முனை பிரதான வீதியில் இரு தனியார் பஸ்கள் ஒன்றுடன் மோதி பாரிய சேதம் -அரச கட்டிடத்திறகும் பாரிய பாதிப்பு.
திங்கட்கிழமை (18) காலை 7 மணியளவில் கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் போரூந்து ஒன்றும், ஆரையம்கதி கமநல சேவைகள் திணைக்கள அலுவலகத்திற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு தனியார்; போரூந்து மீது பின் பக்கமாக மோதியதில் இரு போரூந்து வண்டிகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் கமநல சேவைகள் திணைக்கள அலுவலத்தின் மதில்மற்றும் பிரதான கதவுகள் உடைந்து நொருங்கி சேதமடைந்துள்ளன.
பின்னால் வேகமாக வந்த பேரூந்து வேறொரு வேனை முந்திச் செல் முற்பட்போதே நிறுத்தியிருந்த போரூந்து வண்டிமீது மோதியதால் அந்த போரூந்து அலுவலக கட்டிட மதிலில் மோதியுள்ளது. அதன்போதே அக்கட்டிடத்திற்கு சேதமேற்பட்டுள்ளது.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்..
0 Comments:
Post a Comment