மட்டு வவுணதீவு பாலத்தின் கீழிலிருந்து சக்திவாய்ந்த குண்டு மீட்பு.
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு ஆற்றுப்பகுதியில் இருந்து திங்கட்கிழமை (25) மாலை சக்திவாய்ந்த கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு தலைமையக குற்றப்புலனாய்வு பொலிஸ் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொண்ட நடவடிக்கையின் கீழ் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வவுணதீவு ஆற்றுப்பகுதியில் இருந்து இக்கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பான சட்ட நடவடிக்கைக்காக மாவட்ட நீதவான் நீதிமன்ற சட்ட நடவடிக்கையின் கீழ் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment