தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி முனைத்தீவு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடு.
மட்டக்களப்பு மாவட்டம் முனைத்தீவு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் புதன்கிழமை (13) விசேட பூஜை வழிபாடுக்ள இடம்பெற்றது.
இந்தநிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சி ஊடகசெயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் மா.நடராசா, இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் அணி தலைவர் லோ.திபாகரன், போரதீவுபற்று பிரதேச சபை முனைத்தீவு வட்டார உறுப்பினர் கரன், மகளீர் அணி மட்டக்களப்பு உறுப்பினர் திருமதி.க.ரஞ்சினி, மற்றும் வாலிபர்அணி உறுப்பினர்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
0 Comments:
Post a Comment