26 Jan 2021

தனிமைப்படுத்தப்பட்ட மட்டு.அரசடி கிராம சேவகர் பிரிவில் 6 வீதிகள் விடுவிப்பு - 2 வீதிகள் தொடர்ந்தும் முடக்கம்.

SHARE

தனிமைப்படுத்தப்பட்ட மட்டு.அரசடி கிராம சேவகர் பிரிவில் 6 வீதிகள் விடுவிப்பு - 2 வீதிகள் தொடர்ந்தும் முடக்கம்.

தனிமைப்படுத்தப்பட்ட மட்டக்களப்பு அரசடி கிராம சேவகர் பிரிவில் 5 வீதிகள் திங்கட்கிழமை(25) மாலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய  சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் என்.மயூரன் தெரிவித்தார்குறித்த கிராம சேவகர் பிரிவில் இரு வீதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 17 ஆம் திகதி அரசடி கிராம சேவகர் பிரிவில் மூர்;வீதியில் 79வயது முதியவரும் அதனையடுத்து சில தினங்களில் அவரது மனைவியும் கொரோனா தொற்றினால் மரணமானதினால் அரசடி கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது.

அரசடி கிராம வேசகர் பிரிவு முழுவதும் அன்டிஜன் மற்றும் பீ சீ ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டபோது குறித்த ஆறு வீதிகளிலும் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படாமையினால் இவ்வீதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் 22 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட மூர்வீதி மற்றும் பிள்ளையர் கோயில் வீதி என்பன தொடர்ந்தும் முடக்கபட்டுள்ளன.

பழைய வாடி வீட்டு வீதிபன்சல வீதிகொலட் லேன்சுப்பையா வீதிலேடி மெனிங் ட்றைவ்பயனியர் வீதிஆகிய ஆறு வீதிகள்  விடுவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.











SHARE

Author: verified_user

0 Comments: