1 Jan 2021

கொரோனா சுகாதார நடைமுறைகளைப் பேணி கிழக்கில் அமைதியான 2021 புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்.

SHARE

கொரோனா சுகாதார நடைமுறைகளைப் பேணி கிழக்கில் அமைதியான 2021 புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்.

மலர்ந்துள்ள 2021 புத்தாண்டை கிழக்கு மாகாண மக்கள் கொரோனா சுகாதார நடைமுறைகளைப் பேணி அமைதியாகக் கொண்டாடி வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமய வழிபாடுகளுடன் புத்தாண்டை மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஆலயங்களில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. முகக் கவசம் அணிநது சமுக இடைவெளிகளைப் பேணி வழிபாடுகளில் மக்கள் பங்கேற்றனர்.

மட்டக்களப்பு புனித மரியாள் இணைப்பேராலயத்தில் இடம்பெற்ற ஆராதனையில் குறிப்பிட்ட அளவிலான மக்கள் பங்கு கொண்டனர். மட்டக்களப்பு புளியந்தீவு பங்குந்தை அருட்தந்தை அன்னதாஸ் புத்தாண்டு விசேட கூட்டுத் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் நீங்க விசேட பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.







SHARE

Author: verified_user

0 Comments: