14 Dec 2020

மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டி கைநூல்கள் வழங்கி வைப்பு

SHARE

(ராஜ்)

திருகோணமலை தேசிய உறவுகள் நலன்புரிச் சங்கத்தினால் ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரி மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டி கைநூல்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இக் கைநூல்களை வழங்கும் நிகழ்வு  12ம் திகதி பாடசாலை அதிபர் தலைமையில் சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளுடன் நடைபெற்றது. நிகழ்வில் தேசிய உறவுகள் நலன்புரிச் சங்கத்தின் நிர்வாகிகள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


இதற்காக 79000 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டு இந்த கைநூல்கள்அச்சிடப்பட்டு வழங்கி வைக்கப்பட்டது. இதற்கான நிதியினை  சர்வதேச மனிதநேய நண்பர்கள் அமைப்பு வழங்கியது.

இக் கைநூல்கள் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கும் பத்தாம் தர மாணவர்களுக்குமாக 350 கைநூல்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









SHARE

Author: verified_user

0 Comments: