22 Dec 2020

மண்டூர் வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து வெள்ள நீர் பாய்கின்றது.

SHARE

மண்டூர் வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து வெள்ள நீர் பாய்கின்றது.

மட்டக்களப்பு  வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதியை ஊடறுத்து தற்போது பெய்துவரும்  கன மழை காரணமாக வெள்ள நீர் பாய்ந்தோடுவதால் மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இம்மழை வெள்ளத்தினால் இப்பிரதேசத்திலுள்ள ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது.

வெள்ளப்பெருக்கினால் வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதி மற்றும் தம்பலவத்தை வீதி போன்ற இடங்களிலுள்ள தாம்போதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

நீர் பரவிச் செல்லும் குறித்த வீதிகளில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.












SHARE

Author: verified_user

0 Comments: