(ராஜ்)
குச்சவெளி பிரதேச செயலகப்பிரிவில் குடிசை வீடுகளில் வாழும் 15 குடும்பங்களுக்கு கூரை விரிப்பு வழங்கி நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு பிரதேசவாசிகள் தமது இருப்பிடங்களில் மழை காலங்களில் வாழ சிரம்ப்படுவதாகவும் குறிப்பாக கூரை ஒழுக்கை கட்டுப்படுத்த கூரை விரிப்பு களை வழங்குமாறு கோரியதற்கிணங்க வாழையூற்று மற்றும் வீரஞ்சோலை பிரதேசத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் அறிவுறுத்தல்களுக்கமையவும் உதவி அரசாங்க அதிபர் என். பிரதீபனின் ஒருங்கிணைப்புடன் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படது.மாவட்ட செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஜே.சுகந்தினி காப்போம் அமைப்பின் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் குறித்த டென்ட்களை வழங்கிவைத்தார்.
0 Comments:
Post a Comment