மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் பிராந்தியக காரியாலயகத்திற்கு இராஜாங்கள அமைச்சர் வியாழேந்திரன் விஜயம்.
மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள பிராந்தியகக் காரியாலயத்திற்கு திங்கட்கிழமை (02) விஜயம் செய்த பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் அவர்கள் நிலமைகளைப் பார்வையிட்டார்.
அரவது அமைச்சின்கீழ் வருகின்ற இக்கூட்டுத்தாபனத்தினால் தற்போதைய நிலையில் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள் குறித்தும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்தும் கூட்டுத்தாபனத்தின் உதவிப் பிராந்திய முகாமையாளர் ம.மலைமகள், வெளிக்கள உத்தியோகஸ்த்தர் பி.சிவநாதன் ஆகியோரிடம் கேட்டறிந்து, மரமுந்திரிகை உற்பத்திகளையும் பார்வையிட்டார்.
மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் குறித்து இதன்போது அமைச்சருக்கு உத்தியோகஸ்த்தர்களால் எடுத்துரைக்கப்பட்டதுடன், அதனை விஸ்த்தரிப்பது தொடர்பிலும், தீர்க்கப்படவேண்டிய விடையங்கள் குறித்தும் விளக்கமளித்தனர்.
0 Comments:
Post a Comment