17 Nov 2020

தற்போது வெளியாகியுள்ள புலைமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 42 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

SHARE
(விஜய்)

தற்போது வெளியாகியுள்ள புலைமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 42 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் புலைமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 98 மாணவர்களில் வெட்டுப்புள்ளிக்கு மேலாக 42மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள்.தி.அபூர்வன்,ம.ஹரீஸ் ஜெரூண் ஆகிய இருவரும் 191 அதிகூடிய புள்ளிகளை பெற்றுள்ளார்கள்.புலமைப் பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை கற்பித்து ஊக்கப்படுத்திய ஆசிரியர்களான எஸ்.சிற்சபேசன்,வை.துவாரகன்,திருமதி.தர்சினி ஜெயந்திரன் ஆகியோர்களுக்கு பாடசாலையின் அதிபர் மற்றும் கல்லூரி சமூகத்தினர் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துகொள்கின்றனர்.

தற்போது வெளியாகியுள்ள புலைமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில்  42 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் இ.பாஸ்கர் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: