13 Nov 2020

காத்தான்குடியில் 106 பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை

SHARE


காத்தான்குடியில் 106 பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை.

மட்டக்களப்பு காத்தான்குடியில் நேற்று மாலை 106 பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

காத்தான்குடி நகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் போக்குவரத்து சேவை ஊழியர்கள், வங்கி காவலாளிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் வர்த்தக நிலையங்களில் வேலை செய்பவர்கள், அரச அலுவலகத்தின் ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என தெரிவு செய்யப்பட்ட 106 நபர்களின் மாதரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர்.பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதான வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டன.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஆசாத் ஹசன் முன்னிலையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்;.எம்.பசீர், பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.றஹ்மத்துல்லாஹ் ஆகியோரினால் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டரங்கில் வைத்து இவர்களிடமிருந்து மாதிரிகள் பெறப்பட்டன.

இதன்போது காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பொலிசார் ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.













SHARE

Author: verified_user

0 Comments: