23 Oct 2020

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் செயலாளராக முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் செயலாளர் நாயகம் வடிவேல் பற்குணன் நியமனம்.

SHARE

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் செயலாளராக முகாமைத்துவ சேவை உ
த்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் செயலாளர் நாயகம்   வடிவேல் பற்குணன் நியமனம்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் பதில் செயலாளராக அனைத்து  முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் செயலாளர் நாயகம் வடிவேல் பற்குணன் இன்று (23) வெள்ளிக்கிழமை தனது கடமைப் பொறுப்பினை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலகத்தின் திட்டமிடல் உதவியாளராகவும்,  மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் செங்கலடி நீர்ப்பாசன திணைக்கள அலுவலகங்களின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக மிகவும் வினைத்திறனுடன்   பணியாற்றிய இவர் இன்று கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) அவர்களினால் குறித்த பிரதேச சபைக்கு பதில் செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

செங்கலடி சித்திவிநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளை தொடர்ந்து  பிரதேச சபையின் புதிய செயலாளர் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து உத்தியோகபூர்வமாக தமது கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வுகளில் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் நாகமணி கதிரவேல் உட்பட பிரதேச சபையின் உறுப்பினர்கள்,  உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும்  கலந்துகொண்டிருந்தனர்.









SHARE

Author: verified_user

0 Comments: