7 Oct 2020

விவசாயிகள் பயிர்ச்செய்கையின் போது எதிர்கொள்ளும் நோய் பீடைத்தாக்கத்திற்கான உடடின ஆலோசனை வழங்கும் நிகழ்வு.

SHARE

விவசாயிகள்  பயிர்ச்செய்கையின் போது எதிர்கொள்ளும் நோய் பீடைத்தாக்கத்திற்கான உடடின ஆலோசனை வழங்கும் நிகழ்வு. விவசாய திணக்களத்தினால் நடைமுறைப் படுத்தப்படும் விவசாயிகள் தமது பயிர்ச்செய்கையின் போது எதிர்கொள்ளும் நோய் பீடைத்தாக்கத்திற்கான உடனடித்தீர்வினை விரைவாகவும் வினைத்திறனாகவும் வழங்கும் நோக்கத்துடன் அவர்கள் எதிர்கொள்ளும் பீடைத் தாக்கங்களுக்கான உடனடி ஆலோசனை வழங்கும் நிகழ்வொன்று களுவாஞ்சிகுடியில் செவ்வாய்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட விவசாயத்திணைக்கள தெற்கு வலையத்திற்கு உட்பட்ட களுவாஞ்சிக்குடி விவசாய போதனாசிரியர் ஏன்.லட்சுமன் தலமையில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக இந்நிகழ்வு இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டு தாம் உற்பத்தி செய்யும் பயிர்களில் எற்படும் நோய் பீடைகளுக்கான தீர்வினையும், ஆலோசனைகளையும் விவசாயத் திணைக்கள அதிகாரிகளிடமிருந்து பொற்றுக்கொண்டனர். இந்நிகழ்வு ஒவ்வொரு மாதமும் முதலாவது வாரத்தின் செவ்வாய்கிழமைகளில் இடம்பெறும் என இதன்போது களுவாஞ்சிக்குடி விவசாய போதனாசிரியர் என்.லட்சுமன் தெரிவித்தார்.









SHARE

Author: verified_user

0 Comments: