30 Oct 2020

மாவடிமுன்மாரியிலும் ஒருவருக்கு கொரோனா தொற்று.

SHARE

மாவடிமுன்மாரியிலும் ஒருவருக்கு கொரோனா தொற்று.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிமுன்மாரி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 2 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக பி.சி.ஆர் பரிசோதனையில் வெள்ளிக்கிழமை(30)  கண்டுப்பிடிக்கப்பட்டது. 

இவ்விரு தொற்றாளர்களுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த நபர் கொழும்புக்கு சென்று திரும்பியதாகவும் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற வேளை கொரோனா அறிகுறிகள் காணப்பட்டதனை தொடர்ந்து  
அவருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவருடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதேவேளை கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறாமல் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கவனமாக செயற்படுமாறு கோட்டுக் கொண்டுள்ளார் 

 


SHARE

Author: verified_user

0 Comments: