29 Sept 2020

சபரிக்கம வேலைத்திட்டத்தின் மூலம் .பல்வேறு அபிவிருத்தி பணிகள் தொடராக முன்னெடுக்கப்பபட்டு வருகின்றன.

SHARE

சபரிக்கம வேலைத்திட்டத்தின் மூலம் .பல்வேறு அபிவிருத்தி பணிகள் தொடராக முன்னெடுக்கப்பபட்டு வருகின்றன.ஜனாதிபதியின் விசேட வேலைத்திட்டத்துக்கு அமைவாக அரசின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டமான சபரிக்கம வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொடராக உள்ளக வடிகான்களுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

அதன் அடிப்படையில் ஏறாவூர் நகர எல்லைக்குட்பட்ட பள்ளியடி குறுக்கு வீதி (02 Million), RC குறுக்கு வீதி (02 Million), வாவிக்கரையோர வீதி (02 Million) போன்ற உள்ளக வீதிகள் 6மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வடிகான் அமைப்பதற்கான அடிக்கல் நடும் ஆரம்ப நிகழ்வு ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் ஐ.வாஸித் தலைமையில் இன்று 28.09.2020 இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவரும் கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சருமான ZA. நஸீர் அகமட் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் நகரசபையின் கௌரவ உறுப்பினர் SM. றியாழ், நகரசபையின் உத்தியோகத்தர்கள், நகரசபையின் முன்னாள் தவிசாளர் MI. தஸ்லிம் உட்பட பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.





SHARE

Author: verified_user

0 Comments: