21 Sept 2020

வீதி விபத்தில் ஒருவர் பலி மூவர் படுகாயம்.

SHARE

வீதி விபத்தில் ஒருவர் பலி, மூவர் படுகாயம்.
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் மாவடிவெம்பு பகுதியில் திங்கள் காலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர்  பலியானதோடு மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் சித்தாண்டி திருநாவுக்கரசு வீதியை அண்டி வசிக்கும் நாகராசா சதீஸ் (வயது 22) என்பவரே பலியாகியுள்ளார்.

மேலும், மாவடிவெம்பு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.சுபேந்திரன் (வயது 32) மகேஸ்வரன் தவசீலன் (வயது 18) கருணாகரன் தனுசன் (வயது 26) ஆகியோர் காயமடைந்த நிலையில் உடனடியாக அருகிலுள்ள மாவடிவெம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் படுகாயமடைந்த எஸ்.சுபேந்திரன் (வயது 32) மகேஸ்வரன் தவசீலன் (வயது 18) ஆகியோர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, நெடுஞ்சாலையில் இரு மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் இடறுப்பட்டு நேரெதிரே  மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் இவ்வேளையில் கேஸ் சிலிண்டர்களை ஏற்றி வந்த லொறியொன்றும் பயணம் செய்ததால் அந்த லொறியையும் கைப்பற்றி அதன் சாரதியிடமும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









SHARE

Author: verified_user

0 Comments: