இப்பட்டபின் படிப்பு கற்கை நெறிக்கான நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளராக தொழில்நுட்பவியல் பீடத்தின் முன்னாள் பீடாதிபதி கலாநிதி எம்.ஜி.முகம்மட் தாரீக் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கான விண்ணப்பம், செப்டம்பர் 21 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமெனவும், இது தொடர்பான மேலதிக தகவல்களை 0672052818 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த துறை சார்ந்த பட்டதாரிகளுக்கு இவ் ஆய்வு கற்கைநெறி ஒரு வரப்பிரசாரமாகும் என்பதுடன், இப்பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரையில் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீமின் முயற்சினால் பல்துறை சார்ந்த ஆய்வுகள், சர்வதேச ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிப்பு போன்றவைகளுக்கும் மற்றும் இவ்வாறான கற்கை நெறிகளை ஆரம்பிப்பதற்கும் கவனம் எடுத்து இங்குள்ள விரிவுரையாளர்களையும், மாணவர்களையும் ஊக்கிவிப்பதும் முக்கிய அம்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment