காத்தான்குடியில் மர ஆலை தீப்பற்றி எரிந்து நாசம்.மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி ஆற்றங்கரை வீதியில் அமைந்துள்ள மர ஆலையொன்றில் புதன்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் இத்தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. 4.00 மணியளவில் தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீப் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
மேலும் தீப்பரவலிற்காரன காரணம் அறியப்படவில்லை, ஐம்பது லட்சம் ரூபாய் பெறுமதியான மரங்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது அதன் உரிமையாளர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
0 Comments:
Post a Comment