16 Aug 2020

மட்டு. கல்லடியிலுள்ள சுவாமி விபுலாநந்த அடிகளாரின் சமாதி அமைந்துள்ள வளாகத்தை அரும்பொருட் காட்சியகமாக மாற்றியமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

SHARE

இ.கி.மிசன் மட்டு. கல்லடியிலுள்ள சுவாமி விபுலாநந்த அடிகளாரின் சமாதி அமைந்துள்ள வளாகத்தை அரும்பொருட் காட்சியகமாக மாற்றியமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.றித்த நிகழ்வு இராமகிருஷ்ண மிஷனால் தீர்மானிக்கப்பட்டதற்கமைய அதற்கான நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வு மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்தா ஜி,உதவி மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜி ஆகியோரின் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மட்டு.மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவன், மிசன் அபிமானிகள் மற்றும் காரைதீவிலிருந்து சென்ற மிசன் அபிமானிகள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து சுவாமி விபுலாநந்த மணி மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்தா ஜி, உதவி மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜி ,மட்டு.விபுலாநந்த நூண்றாண்டு விழாச்சபைத்தலைவர் க.பாஸ்கரன், காரைதீவு சுவாமி விபுலாநந்த பணிமன்ற முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.(twn)



SHARE

Author: verified_user

0 Comments: