இலங்கை சொல்லிசைக் கலைஞன் சி.கே.ஆர்.பிரியன் மீண்டும் சொல்லிசையில் தடம் பதிக்கின்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் கிராமத்தைச் சேர்ந்த சி.கே.ஆர்.பிரியன் எனும் இளைஞன், தனது இசைத்துறையை பல சவால்களுக்கு மத்தில் 2015 ஆண்டு ஆரம்பித்து பல பாடல்களையும் வெளியிட்டு இலங்கை தமிழ் இசைத்துறைக்கு பெரும் பங்கையும் பெயரையும் பெற்று கொடுத்துள்ளார்.
இவர் இந்திய பிரபல பாடகி கவிதா கோபியுடன் இனைந்து மகுடி பெண் எனும் பாடலை பாடியும் உள்ளார். இந்தப் பாடல் பிரபல மலேசிய திரைப்படத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது விசேட அம்சம் ஆகும். இப் பாடல் மிக விரைவில் வெளிவரும்.
இதனை தொடர்ந்து இசைத்துறையில் சமீப காலமாக இவரின் பாடல்கள் எதுவும் வெளியிடப்படவிலலை. இது தனக்கு ஏற்பட்ட பல தடைகளே கராணம் என அவர் தெரிவிக்கின்றார்.
இந்நிலையில் சொல்லிசையில் கால் பதித்த இவர் வருகின்ற செப்டம்பர் மாதம் நான் அடிமை இல்லை எனும் பாடலை வெளியீட்டு வைப்பதற்குரிய ஆயத்தங்களை மேற்கொள்ளவதாகத் தெரிவிக்கின்றார்.
இப் பாடல் ஒட்டு மொத்த இசைத்துறைக்கும் சமர்ப்பனம் எனவும், இப்பாடலில் தன் வாழ்கையில் அடிமைகளாக வாழ்ந்த விடையங்களைக் கூறுவதாகவும். விரைவில் இலங்கை தமிழ் இசைத்துறைக்கு அங்கிகாரம் இலங்கையில் கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவிக்கின்றார்.
0 Comments:
Post a Comment