19 Aug 2020

காத்தான்குடியில் சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பு

SHARE

காத்தான்குடியில் சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பு. மட்டக்களப்பு மாவட்ட சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் வழிகாட்டலில்  மாவட்டத்தில் செயற்பட்டு வருகின்ற சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்கு வித்து அவர்களி உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் மட்டு முயற்சியான்மை 2020 எனும் விசேட திட்டம் மாவட்டரீதியில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் செயற்பட்டு வருகின்ற சிறுதொழில் முயற்சியாளர்களின் உள்ளுர் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் பிரதேச மட்ட விற்பனைக் கண்காட்சியினை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா இன்று (19) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார். 


இதன்போது உள்ளுர் உற்பத்தியார்கள் தமது உற்பத்திப் பொருட்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்தனர். இந்நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புன்னியமூர்த்தி, காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர், சிறுதொழில் முயற்சிபரிவு  மாவட்ட மேற்பார்வை உத்தியோகத்தர் எஸ். வினோத், மாவட்ட தகவல் அதிகாரி வீ. ஜீவானந்தன், சமுர்த்தி தலைமை முகாமையாளர் திருமதி. பத்மா ஜெயராஜா, சமுர்த்தி வங்கி முகாமையாளர்களான ஏ.எல். சியாத் பஹ்மி, எஸ்.எச். முஸம்மில், மாவட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.






SHARE

Author: verified_user

0 Comments: