9 Jul 2020

கடலுக்குச் சென்ற மீனவரைக் காணவில்லை.

SHARE
கடலுக்குச் சென்ற மீனவரைக் காணவில்லை.
புதன்கிழமை (08) இரவு தேத்தாத்தீவு கடலில் மீன்பிடிக்கச் சென்ற மூவரில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இவ்விடையம் குறித்து மேலும் தெரியவருவதாவது…

சிறிய ரக படகு ஒன்றில் மூவர் மீன்பிடிப்பதற்காக புதன்கிழமை (08 இரவு சென்றுள்ளனர். அவர்களில் ஒருவரே கடலில் காணாமல் போயுள்ளதாக சக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். புதன்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் தமது சிறிய பகில் சென்று கொண்டிருந்தபோது எம்மை நோக்கி பெரியரக படகு ஒன்று வந்து மோதியது பின்னர் எமது படகில் இருந்த ஒருவர் காணாமல் போயுள்ளார். என கடலில் காணாமல் போயுள்ள மீனவருடன் சென்ற சக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு காணாமல் போனவர் தேத்தாதீவுக் கிராமத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை முன்நெடுத்துள்ள இந்நிலையில் 8 படகுகளில் காணாமல் போன மீனவரைத் தேடும் பணியிலும் சக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். 











SHARE

Author: verified_user

0 Comments: