எஞ்சியிருக்கும் மட்டக்களப்பின் எல்லைகளும் எமது கையிலிருந்து தவறிப்போகும் நிலமை ஏற்பட்டுள்ளது - வேட்பாளர் அருண் தம்பிமுத்து.
இந்த மண் எமது மண் இந்த இலங்கை எமது இலங்கை, இந்த மண்ணின் வழங்கள் எமது மக்களின் வழங்கள். இந்த மண்ணின் எதிர்காலம் எமது கையில் இருக்கின்றது. இது இன்னும் எவ்வளவு காலத்திற்கு எமது மக்களின் கைகளில் இருக்கப்போகின்றது என்ற கேள்வி எமது மனங்களில் எழ வேண்டும். மட்டக்களப்பு தமிழகனத்தின் இளைஞர் யுவதிகள் தமிழ் மணுக்காக தமது வாழ்க்கையை அற்பணித்தார்கள். மாறாக அவர்கள் மட்டக்களப்புக்காக மாத்திரம் அற்பணிப்பை முன்நெடுக்கவில்லை. தமிழர் ஒருமைப்பாட்டுக்காகவும், வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்திற்காகத்தான் தமது உயிரைத் தியாகம் செய்துள்ளார்கள்.
துரதிஸ்ட்டவசமாக தமிழர்களானல் முன்னெடுக்கப்பட்ட ஒவ்வொரு நகர்வும் தமிழர்களுக்குத் தகுந்த தீர்வைக் கொடுக்கவில்லை. 1948 ஆம் அண்டிலிருந்து எந்த அரசாங்கங்கள் மாறினாலும், அரசின் கொள்கைகள் ஒன்றாகத்தான் இருந்து வந்துள்ளதை தமிழர்கள் அவதானித்துத்தான் வந்துள்ளார்கள். இந்நிலையில் தமிழர்களுக்குக் கிடைத்த பல சந்தர்ப்பங்களும் நழுவிப்போய்விட்டன.
தற்போது போர் முடிந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன தமிழர்களின் பொருளாதாரம், இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது. அதிலும் மட்டக்களப்பிலுள்ள தமிழர்களின் பொருளாதாரம் மிகவும் வேதனைக்குள்ளாகத்தான் இருக்கின்றது. திருகோணமலையில் 2400 சதுரக் கிலோமீற்றர் கொண்ட அந்த நிலப்பரப்பிலே, தற்போது தமிழர்களின் ஆதிக்கத்திலே வெறுமனே 290 சதுரக்கிலோமீற்றர்தான் இருக்கின்றன. அதுபோல் அம்பாறை மாவட்டத்திலே வெறுமனே 7 வீத நிலப்பரப்புத்தான் தமிழர்களி;ன ஆதிக்கத்துக்குள் இரக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்திலே தமிழர்களின் விகிதாசாரம் தற்போது மழுங்கி 69 வீதமாகக் காணப்படுகின்றது. இவற்றுக்கெல்லாம் காரணம் வெறுமனே போராட்டம் இல்லை.
தற்போது மட்டக்களப்பு இளைஞர் யுவதிகள் தொழில்வாய்ப்பக்களுக்காக இங்கிருந்த வெளி மாவட்டங்களுக்குச் செல்கின்றார்கள். கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 30 ஆயிரம் போர் மட்டக்களப்பைச் சார்ந்தர்க்ள இருக்கின்றார்கள். அதுபோல் மத்திய கிழக்கு நாடுகள், மேற்கத்தேய நாடுகளில் 150000 பேர் தாம் காதலித்த மட்டக்களப்பு மண்ணை விட்டு வாழ்கின்றார்கள். இந்த பொன்நாட்டின் வளங்கள் உலகறிந்தன, இந்த வழங்களை வெவ்வேறு நாடுகளும் சூறையான பல முன்நெடுப்புக்களை கொண்டன. தற்போது நாம் நமது மண்ணின் அடையாளத்தைக்கூட இழக்கும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் இதற்கு மாற்றீடாக இந்த மண்ணில் பிறந்து வளரும் ஒவ்வொரு இளைஞர் யுவதிக்கும், இந்த மண்ணில் எதிர்காலம் இருக்க வேண்டும் என்பதே எனது கவாகும். என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment