18 Jul 2020

கிழக்கு மகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமகால செய்தி அறிக்கையிடல் தொடர்பான செயலமர்வு.

SHARE
கிழக்கு மகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமகால செய்தி அறிக்கையிடல் தொடர்பான செயலமர்வு.
கிழக்கு மகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமகால செய்தி அறிக்கையிடல் தொடர்பான செயலமர்வு ஒன்று மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள வொய்ஸ் ஒவ் மீடியா ஊடக வளங்கள் மற்றும் அய்வுக்களான நிலையத்தில் சனிக்கிழமை (18) இடம்பெற்றது.

கிழக்கு மகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவஅதிரன் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் கொழும்பிலிருந்து வருகைதந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் பிரெடி கமகே, வளவாளராகக் கலந்து கொண்டு சமகால செய்தி அறிக்கையிடல் தொடர்பான கருத்துக்களையும், விளக்கங்களையும் வழங்கினார்.

இதன்போது ஊடகவியலாளர்கள் சமகாலத்தில் செய்தி அறிக்கையிடல், எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள், மற்றும், புதிய அரசாங்கம் அமையப் பெற்ற பின்னர் தகவல் திணைக்களப் பணிப்பாளரை மட்டக்களப்புக்கு அழைத்து கலந்துரையாடுதல், கிழக்கிலுள்ள ஊடகவியாலாளர்கள், தெற்கிற்கும், தெற்கிலுள்ள ஊடகவியலாளர்கள் கிழக்கிற்கும் பரஸ்பர விஜயம் மேற்கொள்தல், உள்ளிட்ட பல விடையங்கள் தொடர்பிலும், இதன்போது, கலந்துரையாடல்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.











SHARE

Author: verified_user

0 Comments: