இக்கலந்துரையாடலில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும், கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட, மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இதுவரையும் நீதி கிடைக்காதிருப்பது பற்றியும், கலந்துரையாடப்பட்டன.
இதுவரை காலமும் ஊடகவியாலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும், அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நாம் தமது வெற்றியின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு உரிய நலநோம்புத் திட்டங்கள், அநீதிக்க எதிரான நீதி விசாரணைகளை முன்நெடுத்தல், உள்ளிட்ட அனைத்து விடையங்களிலும் முன்னின்று செயற்படவுள்ளதாக, இதன்போது வேட்பாளர்கள் தெரிவித்தனர்.
இக்கலந்துரையாடலில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளனர்களான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கி.துரைராசசிங்கம், ஞா.சிறிநேசன், கோ.கருணாகரம் (ஜனா), ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.எஸ்.எஸ்.அமீரலி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் அருண் தம்பிமுத்து, திருமதி.சந்திரகாந்தா மகேந்திரநாதன், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பஷீர் சேவுதாவுத், மற்றும் கொழும்பிலிருந்து வருகைதந்த பிரெடி கமகே, மீபுர, கிழக்கு மாகாண ஊடகவியலாளர்க்ள என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment