(ராஜ்)
முதியோர் இல்லத்திற்கான பொருட்கள் கையளிக்கபட்டதுஉப்புவெளியில் உள்ள சென் யோசப் முதியோர் இல்லத்திற்கான உலர் உணவுப் பொதிகளை திருகோணமலை அரசாங்க அதிபர் அசங்க அபயவர்த்தன அவர்களினால் கையளிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் நிதி உதவியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் நா.மதிவண்ணன் மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஜீவிதன் சுகந்தினி மற்றும் அகம் நிறுவன திட்ட முகாமையாளர் த.திலீப்குமாா் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment